கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறை நீக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு (29.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி கிலோ ஒன்றுக்கு 16 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் அவர் தெவித்துள்ளார்.