வெல்லம்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டிய , கித்தம்பஹுவ பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 15 முகத்துவாரத்தைச் சேர்ந்த 47 வயதானவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.