Date:

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இல்லத்திற்கு அருகில் பதற்றம்

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது  ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும்  வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும் என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவத்தினையடுத்து  அவரது வீட்டுக்கு முன்பாக  பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் முதல் கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...

கல்கிசை குழு மோதலில் ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

போர் அவளிடம் அழுவதற்கான சக்தியைக் கூட பறித்துவிட்டது

காசாவின் ஷேக் ரத்வான் பகுதியில், 6 வயது மிஸ்க் எல்-மெதுன் அமைதியாகக்...

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு

மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு...