2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்த்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.
2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்த்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
2,78,196 பாடசாலை பரீட்சாத்திகளும் 53513 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு 2 ஆயிரத்து 200 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.