Date:

நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்

மாத்தளையில் வீடொன்று அடித்து உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரை கைது செய்யுமாறு கோரி நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை – எல்கடுவ பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றின் வீட்டை முகாமையாளர் ஒருவர் அடித்து உடைக்கும் காணொளி ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது.

வீடு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு கடந்த 19.08.2023 அன்று தனது அதிகாரிகள் சகிதம் சென்ற உதவி முகாமையாளர், குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான சூழலிலேயே இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதையடுத்து நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்க்கட்சியின் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை கைவிடுமாறு சபாநாயகர் கோரிய போதும் அந்த கோரிக்கையை புறக்கணித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373