Date:

இறக்குமதி தடை குறித்து வெளியான புதிய தகவல்

சர்வதேச வர்த்தகத்திற்கு நாடு திறக்கப்பட வேண்டும் எனவே இறக்குமதி தடைகளை தொடர்ந்தும் பேண முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதல் 3,000 HS குறியீடுகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்ட போதிலும், இறக்குமதியை நிரந்தரமாக தடை செய்ய முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடுமையான மேற்பார்வையின் கீழ் எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் .நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில் பெரும்பாலான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.

அடுத்த மாத நடுப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய மதிப்பாய்வுக்கு முன்னதாக மீதமுள்ள கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...