Date:

கேக் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி (photo)

கிளிநொச்சி நகரில் சில நாட்களுக்கு முன் நுகர்வோர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்ட கேக் ஒன்றில் கோழி இறகு காணப்பட்டுள்ளது.

இதனை ஒருவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,“கிளிநொச்சி நகரிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட கேக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதற்காக வெட்டிய போது முழுமையான கோழி இறகு அதனுள் காணப்பட்டது.

 

தயவு செய்து உணவு சுகாதாரம் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.

ஏற்கனவே நாம் உண்ணும் உணவில் அரைவாசி நஞ்சாகவே காணப்படுகிறது. இதில் இப்படியும் என்றால் மனித வாழ்க்கை நிலை?”என பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு பல இடங்களில் உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் சுகாதாரமற்ற தன்மை காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் மேற்கூறப்பட்டவாறு சில உணவகங்கள் சார்ந்த செய்திகளே வெளிவந்துள்ளன. இன்னும் சில இடங்களில் அதை பொருட்படுத்தாத நிலையும் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில்...

காற்றாலைக்கு எதிராக நாளை ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18)...

சப்ரகமுவ முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்...

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20...