Date:

நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு புதிய தண்ணீர் பௌசர் கையளிப்பு

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு கோடி 35 இலட்சம் ரூபா பெறுமதியான தண்ணீர் பௌசரொன்று, கொய்கா (KOICA) மற்றும் யூ.என் ஹெபிடாட் (UN – HABITAT ) நிறுவனங்கள் ஒன்றினைந்து வழங்கியுள்ளன.

இதற்கான நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட செயலாளர், கொய்கா நிறுவனத்தின் பணிப்பாளர் கிம் , யூ.என் ஹெபிடாட் நிறுவனத்தின் முகாமையாளர் சலிம் கறீம் சாடா மற்றும் இரு நிறுவனத்தின் ஏனைய உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...