பதுளை-கொழும்பு பிரதான வீதியில் எல்ல ஹல்பே பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பஸ் ஒன்றும் இன்று (12) மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பெண்கள், மூன்றரை வயது சிறுமி மற்றும் இரண்டு ஆண்கள், தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய இரண்டு பஸ்களின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.