Date:

பிக்பாஸ் சீசன் 7 – ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் நிகழ்ச்சி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த ஆறு சீசன்களாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆறு சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்றும், அவர் நடித்துள்ள ப்ரோமோ வீடியோவின் படப்பிடிப்பு சென்ற மாதம் சென்னையில் நடைபெற்றது என்ற தகவலும் தற்போது இணையத்தில் வெளியானது.
ஒவ்வொரு சீசனிலும் வைரலான செலிபிரிட்டிகள், பரபரப்பாக இருந்து இன்று வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள், சின்னத்திரையில் கவனம் ஈர்த்தவர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்கள், காமெடியன்கள் இப்படி பலரின் கலவையாகவே போட்டியாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்த பிக் பாஸ் 7வது சீசனில் பங்கேற்கப்போகிறவர்கள் என சில போட்டியாளர்களின் விவரம் என ஏற்கனவே இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.
அந்த பட்டியலில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் பிருத்திவிராஜ் என்ற பப்லு, சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து ஜாக்குலின், சர்ச்சை கருத்துகளால் மிகவும் பிரபலமாக இருக்கும் ரேகா நாயர், நடிகை ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ், தனியார் பேருந்து பெண் ஓட்டுநராக பிரபலமான ஷர்மிளா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த அப்டேட்டை தொடர்ந்து மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீசனில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கும் என்றும் அதில் ஒரு வீட்டில் இந்த சீசன் போட்டியாளர்களும் இரண்டாவது வீட்டில் பழைய பிக் பாஸ் சீசன் போட்டியாளர்களும் தங்க வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய மற்றும் பழைய போட்டியாளர்கள் தனித்தனியே இரண்டு வீடுகளில் இருக்கப்போவதால் போட்டியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்றாம் அதுதான் இல்லையாம். வழக்கமான எண்ணிக்கையில் தான் இரெண்டு வீட்டிலும் போட்டியாளர்கள் பிரித்து தங்க வைக்கப்படுவார்களாம்.
எனினும் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இது வரையில் வெளியாகவில்லை. பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ இந்த மாத இறுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரசிகர்களின் ஆர்வம் இப்போதிலிருந்தே அதிகமாக உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து...

தேசபந்து நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு...

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.   ஏப்ரல்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373