Date:

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்சுலின் வழங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்ட விநியோகஸ்தர், தேவையான அளவு இன்சுலின் வழங்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

தட்டுப்பாடு காரணமாக மேலும் இரு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்சுலின் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இன்சுலின் அடங்கிய 50,000 பொதிகள் அவசர கொள்வனவாக இறக்குமதி செய்யப்பட்டதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் குறித்த பங்கு இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக...

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த: கல்முனையில் எரிபொருள் ‘கியூ’

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...

ஈரான் – இஸ்ரேல் மோதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்துள்ள தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில்...

தாக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத்...