பொலன்னறுவையில் அரிய வகை மீன் இனம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பெலெட்டியா ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவருக்கு சுமார் இரண்டரை அடி நீளமுள்ள இந்த மீன் கிடைத்துள்ளது.
நேற்று மாலை இந்த மீன் வலையில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தினசரி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எச்.எம். விமலரத்ன என்பவரே இதனை கண்டுபிடித்தார்.
இந்நிலையில் குறித்த மீனை இலங்கை மகாவலி அதிகாரசபையில் ஒப்படைத்துள்ளார்.
மேலும், இந்த அபூர்வ மீனை பார்க்க கிராமத்தில் பலர் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW