Date:

பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் அருந்திய நபரால் பரபரப்பு

புபுரஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்குள் நபர் ஒருவர் விஷம் அருந்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஜதலாவ, பன்விலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபரின் 25 வயது மனைவியுடன் சிறிது காலமாக தகராறு இருந்து வந்த நிலையில் இது குறித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது மனைவியின் பின்னால் குறித்த நபரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

மனைவி முறைப்பாடு செய்யும் போது மறைத்து வைத்திருந்த விஷப் போத்தலை எடுத்து குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு விஷப் போத்தலை பறித்து பின்னர் இந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்விலதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள ஒரு பணியிடத்தில் இருவரும் சந்தித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்களுக்கு 4 வயதில் ஒரு பிள்ளை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் சில காலமாக தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மனைவி புபுரஸ்ஸ பொலிஸில் இதற்கு முன்னர் 6 தடவைகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் 7வது தடவை முறைப்பாடு செய்யும் போதே அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...