Date:

குர்-ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்

சுவீடன் நாட்டில் புனித குர்-ஆன் எரிக்கப்பட்டது வழிபாட்டுச் சுதந்திரத்தை மீறும் செயல் எனத் தெரிவித்ததுடன், ஜெனீவாவிலுள்ள  மனித உரிமைகள் சபை இது குறித்து இன்னும் அமைதி காப்பது ஏன் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

இச்சம்பவத்துக்கு இணங்கி இதை கருத்துச் சுதந்திரம் என மனித உரிமைகள் சபை கூறுமாயின் சர்வதேசத்தில் தெற்கு மற்றும் மேற்கத்திய அமைப்புகளுக்கு இடையே பிளவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

“இந் நிகழ்வை கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் மழுங்கடிக்க முடியாது.பெரும்பாலானவர்கள் இதை  மதத்தின் மீதான தாக்குதலாக கருதுகின்றனர். ஆனால் இதனை ஆதரிக்கும் சில மேற்கத்திய தேசங்கள், பெரும் சீர்குலைவை உள்ளடக்குவதற்காக கருத்து சுதந்திரத்தின் துறைகளை விரிவுபடுத்துகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை...

இலங்கை பாராளுமன்றத்திற்குள் புகுந்த இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்!

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தின் பொதுமக்கள்...

கெஹெலியவின் குடும்பத்திற்குள் ஆழமாக விரியும் விசாரணை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள்...

ஈரான் ஒருபோதும் சரணடையாது’

ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் ஈடுசெய்ய...