Date:

விமான நிலையத்தில் சிக்கிய தங்கம்

சட்டவிரோதமான முறையில் 1 கிலோ 780 கிராம் தங்கத்தினை இலங்கைக்கு கொண்டு வந்த நபரும் அதற்கு உறுதுணையாக இருந்த நபரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 39 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகர்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இந்தியாவின் சென்னையில் இருந்து இந்த நாட்டுக்கு வந்துள்ளனர்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் தங்கம் கையிருப்புடன் வெளிநாடு செல்ல முயன்ற பெண்ணையும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் 814 கிராம் திரவ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமைச்சர் விஜித்த ஹேரத் வத்திக்கான் பயணம்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி...

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக இருக்கும் ரணில்

எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்ச விசாரணை...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றும்(25) இடம்பெறுகின்றது.   இதற்காக நிறுவப்பட்டுள்ள வாக்களிப்பு...

சிறி தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373