Date:

ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலையினால், அடுத்த 24 மணித்தியாலங்களில் நில்வலா ஆற்றின் தாழ்நிலப் பகுதிகள் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (14) காலை முதல் நில்வலா ஆற்றுப் பகுதியின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹகொட, மாத்தறை மற்றும் தெவினுவர பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்களில் கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர் மட்டப் பகுப்பாய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...