பொருளாதார நிலைபேற்று வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதிவசதிகளுக்கு இணையாக இலங்கையின் நிலைபேற்றுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்திவங்கியால் 350 மில்லியன் டொலர்கள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன்வசதி மற்றும் 1.5 மில்லியன் டொலர்கள் தொழிநுட்ப உதவித் தொகையை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.