க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்,
“க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 600,000 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதைப் பற்றி பரிசீலிக்கவும் டலஸ் அழகப்பெரும, அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர்தரக் கல்வியை ஆரம்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழகுங்கள்
எந்த மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வைத்து எவரும் வேலைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதும் உண்மையாகும்
இதன் மூலம் மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட மாட்டாது “என்றார்.