இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பதற்காக மாத்திரம் சுமார், 5 ஆயிரம் ரூபா வரையில் செலவிடுவதற்கு சீனா தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையிலுள்ள குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் சீன அரசாங்கம் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர்மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிலுள்ள மிருககாட்சிசாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலேயே சீனாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பதற்கும், அதனை சீனாவிற்கு கொண்டு செல்வது வரையான அனைத்து செலவீனங்களையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.