சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய தோற்ற இயக்கத்தின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 முதல் 15 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது.
அதற்கிணங்க இன்றையதினம் (14) நண்பகல் 12.11 அளவில் மன்னார், பெரியமடு, புளியங்குளம், கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் (13) நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் , கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக மழை இல்லாத வானிலையே எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.