இலங்கை மத்திய வங்கியில் இருந்து காணாமல் போன 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அன்றைய தினம் குறித்த பிரிவில் கடமையாற்றிய சுமார் 15 பேரிடம் நேற்றுமுன்தினம் (11) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த பணக் கட்டு தவறுதலாக வேறு அலமாரிக்கு சென்றுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், எனினும் குற்றம் நடந்துள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.