Date:

அக்குறணை ஷியா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர், தாதி மீது தாக்குதல் -அலவத்துகொடயில் சம்பவம்

அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட அக்குறணை ஷியா ஞாபகார்த்த வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் தாதியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஜீப் வண்டியை அப்புறப்படுத்துமாறு வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் கூறியதனையடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் அக்குறணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பாதுகாப்பு உத்தியோகத்தரும்  தாதியும் ஷியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பலர் உயிரிழப்பு

ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர்...

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...