Date:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி 29 வயதுடைய கணவன் பலி

பொலன்னறுவை, புலஸ்திபுர பகுதியில் நேற்று கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் மனைவியின் மூலம் கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையில் தகராறு வலுப்பெற்றுள்ளது. இதன்போது இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளாகிய மனைவி கணவனை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம்…

2026 ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற...

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் ஆட்டநிர்ணய சர்ச்சை!

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் மற்றும் ஊழல் இடம்பெறுவதாக சுமத்தப்பட்ட...

ராஜித்தவுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் விசாரணைக்கு

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன்...

அதிரடியாக குறைந்த தங்க விலை !

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள்...