இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலையை 5 வீதத்தினாலேயே தற்போதைக்கு குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கொள்வனவு செய்த டயர்கள் சந்தையில் சந்தையில் கையிருப்பில் உள்ளமையே இதற்கு காரணம் என அதன் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்தார்.
எதிர்வரும் மாதங்களில் புதிய கொள்வனவு மேற்கொள்ளும் போது சுமார் 15 வீதத்தினால் விலையை குறைக்க எதிர்ப்பார்ப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.