உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பை மீண்டும் ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரசியல் கட்சி செயலாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் ஏப்ரல் மாதம் 28, 29, 30, 31 மற்றும் 4ஆம் திகதிகளில் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக தேர்தல் திகதியை பிற்போட வேண்டியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.