Date:

கண்டி – மஹியங்கனை வீதி பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தியுள்ளனர்.

நேற்று (19) மாலை பெய்த கனமழை காரணமாக 18வது வளைவு மற்றும் இரண்டாவது வளைவுக்கு அருகில் பாறை, மண் மேடு சரிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

நிலச்சரிவு பகுதிக்கு மேல் மற்றொரு இடத்தில் பெரிய பாறை சரிவு ஏற்படும் அபாயம் உள்ளமையினால் குறித்த வீதியை மூட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் தண்ணேகும்புர சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியில் பயணித்து ரஜ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக மஹியங்கனை நோக்கி பயணிக்க முடியும் என்பதுடன், மஹியங்கனையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ரஜமாவத்தை சந்தியில் வலப்புறம் திரும்பி ரன்தெனிகல வீதியூடாக பயணித்து தன்னேகும்புர சந்தியில் இடப்புறம் திரும்பி கண்டி நோக்கி செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...