Date:

கொழும்பில் மோசமடைந்துள்ள காற்றின் தரம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் வளிமண்டலத்தின் நிலை ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்றைய தினம், நாட்டின் மிகவும் மோசமான காற்று நிலை கொழும்பு நகரிலிருந்து பதிவாகியுள்ளது.

கொழும்பின் காற்றின் தர மதிப்பு 135 அலகுகள் என்று நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், கம்பஹா நகரத்தின் காற்றின் தர மதிப்பு 130 அலகுகளாகவும், யாழ்ப்பாண நகரம் 128 அலகுகளாகவும், கொழும்பு பத்தரமுல்லை மேற்குப் பகுதியில் 121 அலகுகளாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், காற்றின் தரக் குறியீட்டிற்கமைய, 101-150 அலகுகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...