Date:

களுத்துறை கட்டுக்குருந்தை பிரிமியர் லீக் தொடர் வெட்டுமக்கட பாகிஸ்தான் மைதானத்தில்

களுத்துறை கட்டுக்குருந்தை யுனைடட் விளையாட்டுக் கழகம் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் வாழும் மற்றும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து தற்போது வேறு இடங்களில் குடியிருக்கின்ற உறவுகளை மீண்டும் ஓன்றிணைத்து தமக்கிடையே பரஸ்பரம் தமது கடந்த கால நினைவுகளை மீட்டியபடி புரிந்துணர்வை ஏற்படுத்துவதை நோக்ககக் கொண்டு இரண்டாவது வருடமாக ஒரு கிரிக்கட் சுற்றுப் போட்டியை எதிர்வரும் 19 /03 /2023 அன்று களுத்துறை வெட்டுமக்கட பாகிஸ்தான் மைதானத்தில் நடாத்த தீர்மானித்துள்ளது.

இதில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 10 அணிகளாக பிரிந்தே இவ்வாறு சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது.

இப்போட்டிகளில் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களும் இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் அவர்களும் விளையாடவுள்ளனர்.

ஏனைய ஊர்களுக்கும் முன்மாதிரியாக இவ்வேற்பாட்டை முழு ஊரும் பாராட்டுவதோடு அன்றைய தின காட்சிகளை காண ஆவலாகவும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி..!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின்...

அனைத்து கல்வி தொழிற்சங்கங்களுடன் இணைந்து வேலை நிறுத்தம்

தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு அரசாங்கம்...

இன்று வேலை நிறுத்திய மருத்துவர்கள்!

அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை...

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொடர்பில்…

5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர்  என...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373