Date:

யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்!!

பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட நிலையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்

இவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணினி வகுப்பிற்குச் சென்ற குறித்த யுவதி இரவு வெகுநேரமாகியும் பஸ் வராத காரணத்தினால் மோட்டார் சைக்கிளில் ஏறிய போது குறித்த நபர் யுவதியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த யுவதியை வீட்டினுள் இழுத்துச் சென்றதாகவும், அவரிடமிருந்து தப்பிக்க முற்பட்ட போது, ​​குறித்த நபர் யுவதியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது யுவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அந்த நபரை பிடித்து அடித்து, பொல்பித்திகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அவர் முதலில் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொல்பித்திகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...