வினோதமான விசித்திரமான இயற்கை நிகழ்வுகள் வரும்போது நாம் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறோம்.அப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் நிகழ்வு ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை பெய்துள்ளதால் அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை குறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த மழையில் பூச்சிகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது, மழைக்குப் பின்பு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிகளவு தோன்றியதால் மக்களும் பொரும் அச்சடைந்ததாக கூறப்படுகின்றது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர், இது திடீரென உருவான சூறாவளியால் இந்த புழுக்களை நகருக்குள் கொண்டு வந்திருக்கலாமென கூறியுள்ளனர்.