தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர்களான இரு மாணவர்களும் 15 வயதுடையவர்கள் என்பதுடன் அதே பாடசாலையை சேர்ந்த 11 வயதுடைய மாணவனே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
மேலும், இந்த மாணவனை பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகத்திற்குரிய இரு மாணவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.