அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் அரசாங்கத்துக்கு எதிராக கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (07) முற்பகல் 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய, வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.