Date:

நுவரெலியா – லபுகலை லொறி விபத்து: 14 பேர் காயம்; 5 பேர் கவலைக்கிடம்

நுவரெலியா – லபுகலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாறையில் இலொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்றைய தினம் (05) இடம்பெற்றுள்ளது.

லபுகலை இருந்து நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றச் சென்ற தொழிலாளர்கள் குழுவே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை லபுகெலே பிரதேச வாசிகள் மற்றுயம் கொத்மலை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விபத்தின் போது லொறியில் 15 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், அதில் ஒருவர் லொறியில் இருந்து குதித்துத் தப்பியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாகச் செலுத்தப்பட்ட லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாறையிலிருந்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான...

ரஷ்யாவின் கரையோரப் பகுதியில் நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.4 ரிச்டர் அளவிலான...

விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை...

T-81 ரக துப்பாக்கியுடன் பெக்கோ சமனின் சகா கைது

எம்பிலிப்பிட்டிய கங்கேயாய பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் ஆதரவாளர் ஒருவர்...