பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த செய்தி வௌியாகியிருந்தன.
குறித்த மாணவி பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் நேற்று முன்தினம் சுகயீனமாக இருந்ததாகவும் பின்னர் பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மாணவியின் மரணத்திற்கான காரணம் வௌியாகியுள்ளன.உயிரிழந்த மாணவி மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவி அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த மாணவி சில காலமாக மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் பேராதனைப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.