Date:

பெண் கான்ஸ்டபிளை எட்டி உதைத்து, கைபேசியை திருடிய ஆண் கான்ஸ்டபிள்!

கடவத்தை பகுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த பயிலுநர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை, எட்டி உதைத்து காயப்படுத்தி, அவரது கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸார் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த முறைகேடு காரணமாக சந்தேகநகபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹபாகே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள், கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கான வரவுபதிவில் கையொப்பமிட்டு, பின்னர் சாதாரண உடையில் எவருக்கும் தெரிவிக்காமல் கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இசை கச்சேரியை காண சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு கச்சேரி பாதுகாப்புக்காக பொலிஸார் சீருடையில் வந்த பியகம பொலிஸ்நிலையத்தின் பயிலுநர் பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை காயப்படுத்திவிட்டு கைபேசியை திருடிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...