பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவி பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் உள்ள தனது விடுதி அறைக்குள் சுகவீனமடைந்த நிலையில் நேற்றைய தினம் (28) காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து குறித்த மாணவி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த மாணவி இன்று (1) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தமாணவி குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.