க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது.
இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் online ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்திருந்தது.
பாடசாலை மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய விண்ணப்பிக்க வேண்டும்.
எவ்வித காரணத்திற்காகவும் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.