நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பகுதியில் இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படிகின்றது.
குறித்த நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருப்பது கேள்வியை எழுப்பியுள்ளதுடன், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.