Date:

காரில் சிக்கிய ஒன்றரை வயது சிறுமி சுவைரா – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணம் (சிசிடிவி ஆதாரம்)

கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் ஓட்டிச்சென்ற சொகுசு காரில் மோதி ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஹுவளையில் களுபோவில பி. ரூபன் பீரிஸ் மாவத்தையில் வசித்து வந்த சுவைரா மொஹமட் முஸ்தாக் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதேசவாசிகள் சிறுமியை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சொகுசு காரை ஓட்டிச்சென்ற சிறுமியின் தாயாரின் சகோதரரான 28 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சொகுசு காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி மதியம் வீட்டின் முன்பகுதியில் உள்ள கராஜில் இருந்து வாகனத்தை வெளியில் எடுத்துச்செல்லும் போது, ​​காருக்கு முன்னால் வந்த சிறுமி தரையில் தள்ளப்பட்டு விபத்திற்குள்ளாகியுள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் சிசிடிவி கெமராவில் தௌிவாக பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...