கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் ஓட்டிச்சென்ற சொகுசு காரில் மோதி ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஹுவளையில் களுபோவில பி. ரூபன் பீரிஸ் மாவத்தையில் வசித்து வந்த சுவைரா மொஹமட் முஸ்தாக் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதேசவாசிகள் சிறுமியை களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சொகுசு காரை ஓட்டிச்சென்ற சிறுமியின் தாயாரின் சகோதரரான 28 வயதுடைய கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சொகுசு காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி மதியம் வீட்டின் முன்பகுதியில் உள்ள கராஜில் இருந்து வாகனத்தை வெளியில் எடுத்துச்செல்லும் போது, காருக்கு முன்னால் வந்த சிறுமி தரையில் தள்ளப்பட்டு விபத்திற்குள்ளாகியுள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் சிசிடிவி கெமராவில் தௌிவாக பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.