கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாஎல பொலிஸ் போக்குவரத்து அதிகாரி ஒருவர், பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதன்போது, பொலிஸாருக்கு பயப்படாத பெண் நான் என்று கூறி தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளின் காதில் அடித்துள்ளார்.
ஜாஎல பொலிஸ் போக்குவரத்து அதிகாரியின் காதில் குறித்த பெண் அடித்ததுடன் தனது மோட்டார் சைக்கிளையும் விட்டுச் சென்றதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜாஎல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு நடந்துள்ளது.
குறித்த பெண்ணை தேடிசென்ற பொலிஸாரிடம் பெண்ணின் வீட்டில் உள்ள உறவினர்கள் அவருக்கு மனநலம் சரியில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.