நாளைய தினம் நாடு முழுவதும் அரச வைத்தியர்களும் தனியார் வைத்தியர்களும் வேலை நிறுத்தம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
சேவைகளில் இருந்து விலகி நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக ஒன்றியச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.