Date:

தேர்தல் சில இடங்களுக்கு நடக்காது: விபரம் வௌியாது

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (31) இரவு வெளியாகியுள்ளது.

24 தேர்தல் நிர்வாக மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானிகள் வெளியாகியுள்ளன.உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 38(1) இ உபபிரிவின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி காலை 07 மணிமுதல் மாலை 04 மணி வரை வாக்கெடுப்பு இடம்பெறும். அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 80,720 வேட்பாளர்கள் 339 உள்ளூராட்சிமன்றளில் போட்டியிடவுள்ளனர்.

காலி மாவட்டம் எல்பிடிய பிரதேச சபை மற்றும் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைகளை தவிர்த்து நாடளாவிய ரீதியில் உள்ள 339 உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் டயானாவுக்கு பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...