கொழும்பு – ராகம போதனா வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் வைத்தியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
ராகம போதனா வைத்தியசாலையின் மின் உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு என தெரிவிக்கப்படிகின்றது.
இதனால் முழு வைத்தியசாலையிலும் மின்தடை ஏற்பட்டுள்ளமையினால் வைத்தியர்கள் நோயாளிகள் பாரிய அசெகரியத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
இதன்போது உடனடியாக நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்தமையினால் வைத்தியர்கள் கையடக்கத் தொலைபேசி ஒளியைக் கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் தற்போது வழமைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.