Date:

நிறுத்த மறந்த சாரதி : புகையிரதத்தின் நிலை என்ன? கோட்டையிருந்த பயணித்த பயணிகளுக்கு

கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கொஸ்கம நோக்கி சென்ற புகையிரதத்தினை சாரதி கிருலப்பனை புகையிரத நிலையத்தில் நிறுத்த மறந்தமையினால் பயணிகள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர், சாரதியின் பொறுப்பற்ற செயலினால் பாதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். மேலும் சற்று நேரம் அமைதியின்மையும் நிலவியுள்ளது.

குறித்த புகையிரதம் நேற்று மாலை 04.00 மணியளவில் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் கிருலப்பனை புகையிரத நிலையத்தில் மாலை 04.26 மணியளவில் நிறுத்தப்படவிருந்தது.

இதன்போது தமது கடமைகளை முடித்துக்கொண்டு கிருலப்பனை நிலையத்தில் இறங்கி வீடுகளுக்குச் செல்வதற்காக அதிகளவான பயணிகள் காத்திருந்த நிலையில் சாரதி மறதியாக புகையிரதத்தினை நிறுத்தாது சென்றுள்ளார்.

சாரதியின் கவனக்குறைவினால் இறங்கும் இடத்தினை தவறவிட்ட பயணிகள் நுகேகொட புகையிரத நிலையத்தில் நிறுத்திய உடன் இறங்கி ஆவேசம் அடைந்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...