நாட்டில் இன்றும் திங்கட்கிழமை (30) மற்றும், நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
நாட்டில் தொடர்ந்து மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை காரணமாகவே இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரு நாட்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.