இன்றைய கலந்துரையாடலை தொடர்ந்து, பெப்ரவரி 17 வரையான உயர் தரப் பரீட்சை காலத்தில் மின் துண்டிப்பு இன்றி மின்சாரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.