வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இன்று (24) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த வேனில் பயணித்தவர்கள், சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற போது கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கி பயணித்த பஸ்ஸூடன் நேருக்கு நேர் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வேன் சாரதி உயிரிழந்துள்ளதுடன், வேனில் பயணித்த ஆறுபேர் காயங்களுக்கு உள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.