Date:

பம்பலப்பிட்டியில் பிரபல ஆடை கடையொன்றில் ஏற்பட்ட மோதல்- காரணம் மற்றும் வீடியோ வௌியானது

கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த சனிக்கிழமை மாலை இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

கடையின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு துணிகளை வாங்க வந்த இரண்டு வாடிக்கையாளர்கள், வெளியில் வரும்போது வாகனத்தை தடுக்கும் வகையில் மற்றொரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்துள்ளனர்.

மேலும் அருகில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மற்றைய வாகனத்தின் சாரதியிடம் வாகனத்தை திரும்பப் பெறுமாறு பல தடவைகள் கூறிய போதும் வாகனத்தை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட தம்பதிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

காலதாமதம் காரணமாக துணிகளை வாங்க வந்த வாடிக்கையாளருக்கும், துணிக்கடை ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...