நுவரெலியா – நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துக்கு பஸ் சாரதி உரிய திசையில் பயணிக்கவில்லை என பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பஸ் சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
53 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ் ஒன்று, வேன் மற்றும் ஆட்டோவுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்,
01:- அப்துல் ரஹீம் (55) 02:- ஆயிஷா பாத்திமா (45)
03:- மரியம் (13) 04:- நபீஹா (08) 05:- ரஹீம் (14)
06:- நேசராஜ் பிள்ளை (25) (வான் சாரதி)
07:- சன்முகராஜ் (25) (ஆட்டோ சாரதி)