கொழும்பு – லோட்டஸ் வீதிப் பகுதியில் அனைத்து தொழிற்சங்க கூட்டணிகளும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் பிரதான வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை காலிமுகத்திடல் பகுதியிலும் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்தினர் இணைந்து கொழும்பின் பல இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.